கோவில் திருவிழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியுடன் ஆட்டம்... ரவுடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போலீஸ்

0 1552

சென்னையில், கையில் கத்தியுடன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவருடன் போலீஸ்காரர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சரித்திர பதிவேடு ஏ ப்ளஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கே.கே.நகரைச் சேர்ந்த 21 வயதான அபிஷேக்கை போலீஸார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்குள்ள கோயில் திருவிழா ஒன்றில் கையில் கத்தியுடன் ஆட்டம் போட்ட அபிஷேக், திருவிழா பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர் நாராயணன் என்பவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்களை அபிஷேக் சமூக வலைதளத்தில் ரீல்ஸ்ஸாக பதிவேற்றமும் செய்துள்ளார். தேடப்பட்டு வரும் குற்றவாளியுடன் காவலர் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments