தெலுங்கு தேச கட்சியின் பாத யாத்திரையின் போது கலவரம்-மோதல்

0 1402

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் பாதயாத்திரையின் போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

நுஜிவீடு மண்டலம் துக்குளூரில் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டார்.

அக்கட்சியின் இளைஞர்கள் தெலுங்கு தேச கட்சி கொடியுடன் கோஷங்கள் எழுப்பியவாறு சென்ற போது ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அவர்களது கட்சி கொடிகளை ஏந்தியவாறு எதிர்கோஷம் எழுப்பினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கொடியுடன் இணைக்கப்பட்டிருந்த கட்டைகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை கவனித்த போலீசார் உடனடியாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments