கிரீமியாவில் 42 உக்ரைன் ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு

0 1587

கிரீமியாவில் ஒரே இரவில் தாக்குதல் நடத்த முயன்ற 42 உக்ரைன் ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

9 ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் நேரடியாக தாக்கப்பட்டதாகவும், 33 ட்ரோன்கள் மின்னணு ரேடார் மூலம் இலக்கை அடையாமல் தடுக்கப்பட்டு தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெடி விபத்து உள்ளிட்ட பல சம்பவங்களால் அந்த பாலம் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments