கிரேக்க பயணத்தை தொடர்ந்து, நேரடியாக பெங்களூர் செல்கிறார் பிரதமர் மோடி

0 1525

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தமது இரண்டு நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாளை நேரடியாக பெங்களூரு திரும்புகிறார்.

அங்கு அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

முன்னதாக ஏதென்ஸ் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்துடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திரண்டுள்ளனர்.

மோடியின் வருகையால் கிரேக்க நாடு முழுவதும் மகிழ்ச்சியில் திளைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்புர் சீக்கியர் புனிதத்தலத்துக்குப் பாதையை திறந்து விட்ட மோடிக்கு பஞ்சாபி பங்கரா நடனத்துடன் வரவேற்பு நடத்த உள்ளதாக அங்கு உள்ள சீக்கியர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments