தமிழகத்திற்கு 50 டி.எம்.சி வரையில் பற்றாக்குறை உள்ளது - துரைமுருகன்

0 953

பற்றாக்குறை காலங்களில் காவிரியில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்யவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரேஷன் கடையை திறந்து வைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து முறையாக கிடைக்க வேண்டிய பங்கீட்டில் கிட்டதட்ட 50 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ஒரு நாள் கூட மேகதாது என்ற வார்த்தையை கர்நாடகா பயன்படுத்தியது இல்லை எனவும் துரைமுருகன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments