உதயநிதி கண்ணில் சொட்டு நீர் கூட வந்தது போல தெரியவில்லை : கலாய்த்த ஜெயகுமார்

0 2272

மதுரை மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி காவல்துறை போக்குவரத்தை முறையாக சீர் செய்யவில்லை என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் பொது மக்கள் பாதுகாப்பு கேள்வி குறி ஆனதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் யார் என்று வினவிய அவர் அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் வீடியோவைப் பார்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் சிந்தியதைப் பற்றி குறிப்பிட்ட ஜெயகுமார், கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தலாமா என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments