டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் கோப்பு ஒப்புதலை... திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என். ரவி

0 1703

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்து, ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய கோப்பினை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரை செய்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஆளுநர், நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments