தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு

0 922

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார். இந்நிலையில் அதே மாநாட்டுக்கு வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பது குறித்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக வெளியுறவுச் செயலாளர் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு நடக்கும் பட்சத்தில் இரு தலைவர்களும் 2020ம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பின் சந்திக்கும் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக சமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், பாலியில் நடந்த ஜி20 மாநாட்டிலும் இரு தலைவர்களும் பங்கேற்றாலும் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments