டெல்லியில் 14 வயது சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி கைது.. !!

0 1501

டெல்லியில் 14 வயது சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

2020ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது மகளுக்கு பிரமோதே காக்கா என்ற அதிகாரி அடைக்கலம் கொடுத்தார்.

அதன் பின் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை அதிகாரியின் மனைவி மாத்திரைகள் கொடுத்து கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்த சிறுமிக்கு தற்போது மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியை சந்திக்க அனுமதிக்கக் கோரி, மருத்துவமனை முன்பு டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தர்ணாவில் ஈடுபட்டார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் அதிகாரி பிரமோதே காக்காவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார். இதைத்தொடர்ந்து, பிரமோதே காக்கா மற்றும் மனைவி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments