குருநானக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்... தீபாவளி வெடிகளை நாட்டு வெடிகள் போல் மேக்கப் செய்து வீசிய மாணவர்கள்

0 1928

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர் தரப்பை மிரட்டுவதற்காக தீபாவளி பட்டாசுகளை பேப்பரில் சுற்றி நாட்டு வெடிகுண்டுபோல் வீசியுள்ளனர்.

பி.ஏ பொருளாதாரம் மற்றும் பி.ஏ டிபன்ஸ் படிக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரபபினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த போலீசார் விசாரித்ததில், தீபாவளியின்போதும் சவ ஊர்வலத்தின்போதும் வெடிக்கும் பட்டாசுகளை பேப்பரில் சுற்றி வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments