காஷ்மீரில் கிராமப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

0 1281

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரோடு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம் லாரோ பாரிஜாம் கிராமப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் மூன்றாவது தீவிரவாதி வயல்காட்டிலும் மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பதுங்கி தப்பிச் செல்ல முயற்சிப்பதால் தொடர்ந்து அவனை பாதுகாப்பு படையினர் விரட்டி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments