நீட்டுக்கு விலக்கு பெறும் வரை தி.மு.க. அரசு ஓயாது - முதலமைச்சர்

0 1010

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரையில் தி.மு.க. அரசு ஓயாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை துவக்கத்தில் இருந்து தி.மு.க. எதிர்த்து வருவதாக தெரிவித்தார்.

ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் அறப்போர் நடத்த வேண்டிய நிலை இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், விலக்கு கிடைக்கும் வரை அறப்போர் தொடரும் என்றார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், தற்போது குடியரசுத் தலைவரிடம் மசோதா இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாக்காளர்கள் இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments