ஐபிஎஸ் வேடமணிந்து நகை கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது... அண்ணனின் நகையை கொள்ளை அடிக்க தம்பி போட்ட திட்டம்

0 1525

கோவையில் ஐ.பி.எஸ் வேடமணிந்து நகை கொள்ளையில் ஈடுபட்ட 4பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய காவல் உதவி ஆணையர் பார்த்திபன், சென்னையில் வசிக்கும் மகேந்திரன் என்பவரின் மூத்த சகோதரர் தேவேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும் 500கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலிகளை பயணியிடம் கொடுத்து கடந்த 3ந்தேதி திருச்சியைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரிடம் கொடுக்கச் சொன்னதாகவும் தெரிவித்தார்.

தகவல் அறிந்த மகேந்திரன் தனது நண்பர்கள் உதவியுடன் போலீஸ் சீருடை அணிந்து கார் மூலம் ஏர்போர்ட்டில் இருந்து அப்துல்ரசாக்கை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

பின்னர் அந்த கும்பல் தங்கச்சங்கிலிகளை பறித்து கொண்டு அப்துல்ரசாக்கை விடுவித்துள்ளதாகவும் கூறினார்.

இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4பேர் கொண்ட கும்பலை கைது செய்தது மட்டுமின்றி 500கிராம் தங்கச்சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments