சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு வெற்றி - இஸ்ரோ

0 3713

சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் சுற்றுப்பாதையில் நிலவுக்கு மிக அருகில் சந்திராயன் -3 உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தன்னைத் தானே செல்பி எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரை கரடு முரடாக இல்லாத இடத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments