ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இணையவழி மருத்துவ ஆலோசனைப் பிரிவு தொடக்கம்

0 1119

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இணையவழி மருத்துவ ஆலோசனைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு நேரில் வர இயலாதோருக்காக தொடங்கப்பட்ட இந்த சேவையை, திங்கள் முதல் சனிக் கிழமை வரை, காலை 9 முதல் 12 மணி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையைப் பெற, teleconsultation.s10safecare.com என்ற இணைப்பில் வரும் படிவத்தில் தங்களின் பெயர், வயது, பாலினம், அலைபேசி எண், முகவரியைப் பதிவிட்டால் போதும்; வீடியோ கால் வாயிலாக மூத்த மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

நபர் ஒருவர் தலா 5 நிமிடங்கள் வரை மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும் என்று மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments