ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்ததாக நிதியமைச்சகம் தகவல்

0 1014

நாடு முழுவதும் பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை நடப்பு மாத நிலவரப்படி 50 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த கணக்குகளில் 56 விழுக்காடு பெண்களால் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வைப்புத் தொகையாக 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் நாட்டின் நிதிச்சூழலை சிறப்பாக மாற்றியமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments