மது பாட்டில்களுக்கு ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது சென்னை -அமைச்சர் முத்துசாமி

0 5700


மது பாட்டில்களை விற்கும் போது கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கக்கூடாது என ஊழியர்களுக்கு கண்டிப்புடன் அறிவுறுத்தி இருப்பதாக மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைக்கு முதன்முறை வருவோரை கண்டறிந்து அவர்களிடம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட வாரியாக கவுன்சிலிங் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments