டீசல் டேங்க்கின் வால்வை திறக்காமல் வெல்டிங் வைத்ததால் டீசல் டேங்க் வெடித்து லாரி உரிமையாளர் உயிரிழப்பு

0 3003

கிருஷ்ணகிரியில் வெல்டிங் வைக்கும் போது லாரி டீசல் டேங்க் வெடித்ததில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்தார்.

பெரிய மாரியம்மன் கோயில் எதிரே பழனி என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.

பாறைக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆரியப்பன், தனது லாரியுடன் பட்டறைக்கு சென்று பழனியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பழனி, காலி டீசல் டேங்க் ஒன்றில் கேஸ் வெல்டிங் வைத்தபோது, அது கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது.
இதில் ஆரியப்பன் தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் மோதி உடல்சிதறி இறந்துபோனார்.

பழனி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். டீசல் டேங்க்கின் வால்வை திறக்காமல், வெல்டிங் வைத்ததால், ஏற்கனவே உள்ளே இருந்த வாயுவில் அழுத்தம் ஏற்பட்டு டேங்க் வெடித்திருக்கலாம் என்று கூறப் படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments