உலகளவில் மிகவும் ஆபத்தான அலைச்சறுக்கு போட்டியில் ஜாக் ராபின்சன் முதலிடம்

0 2567

மிகவும் ஆபத்தான அலைச்சறுக்கு போட்டியாக கருதப்படும் பில்லாபோங் புரோ-வில்  ஆஸ்திரேலிய வீரர் ஜாக் ராபின்சன் முதலிடம் பிடித்தார்.

டெஹிட்டி தீவை ஒட்டி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகள், ராட்சத அலைகள் ஏழும்ப வழிவகுப்பதால் அங்கு நடத்தப்படும் அலைச்சறுக்கு போட்டி உலகிலேயே ஆபத்தானதாக கருதப்படுகிறது.

ராட்சத அலைகளை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்த ஜாக் ராபின்சன் ஆண்கள் பிரிவிலும், அமெரிக்க வீராங்கனை கரோலின் மார்க்ஸ் பெண்கள் பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டியிலும் இருவரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments