பாகிஸ்தானில் இரு பிரிவினரிடையே மோதல்... பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

0 1316

பாகிஸ்தானில் ஒரு தரப்பினரின் புனித நூல் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி வன்முறை வெடித்துள்ளது.

பைசாலாபாத் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் நுழைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி சூறையாடி தீயிட்டு எரித்தனர்.

இதேபோல் ஜரன்வாலா என்ற இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி புனித நூல் அவமதிக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இருதரப்பு மோதலைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments