திசையன்விளை அருகே கடலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

0 2241

திசையன்விளை அருகே கடலில் குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரின் உடல் கரை ஒதுங்கியது.

நவ்வலடியைச் சேர்ந்த 8,9,10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்களான ஆகாஷ், முகேஷ், ராகுல் ஆகியோர் நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற நிலையில் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியபோது கடற்கரையில் மாணவர்களின் உடைகள் இருந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குளிக்க சென்ற சிறுவர்கள் கடல் அரிப்பில் சிக்கியிருக்கலாம் என தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 3 மாணவர்களின் உடல்களும் கரை ஒதுங்கின.

இந்த சம்பவம் குறித்து உவரி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments