இந்த ஆண்டு 10 ஆயிரம் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

0 2170

இந்த ஆண்டு 10 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் திஷா குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் மத்திய அரசு பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

அந்தத் திட்டங்களை கண்காணித்தால்தான் தொய்வின்றி நடைபெறும் என்று கூறிய முதலமைச்சர், சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments