டொமினிகன் குடியரசு தலைநகருக்கு அருகே வெடி விபத்து 10 பேர் பலி : 50க்கும் மேற்பட்டோர் காயம்

0 1331

டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியான நிலையில், மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமையன்று சான் கிறிஸ்டோபல் நகரில் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு, அருகிலிருந்த ஹார்டுவேர் மற்றும் பர்னிச்சர் கடைகளுக்கும் தீ பரவியது.

இதில் 4 மாத குழந்தை உட்பட 10 பேர் உயிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 11 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டொமினிகன் குடியரசு அதிபர் லூயிஸ் அபினாடர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments