முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

0 1732

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடமான 'சதைவ் அடலில்' குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதனிடையே இந்தியாவின் 140 கோடி மக்களுடன் இணைந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி சமூகவலை பதிவில் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்ததாக கூறியுள்ளார்.

தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லவும், பல்வேறு துறைகளில் நாட்டை 21 ஆம் நூற்றாண்டுக்கு நகர்த்தி செல்லவும் வாஜ்பாய் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments