ஷாப்பிங் மாலை சூறையாடி ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல்

0 2350

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த 50 பேர் கும்பல், ஒரு சில வினாடிகளில் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டோபங்கா ஷாப்பிங் மாலுக்கு,  bmw, லெக்சஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் 50 பேர் கும்பலாக வந்திறங்கினர்.

கரடிகளை விரட்ட பயன்படுத்தப்படும் ஸ்பிரே-யை பாதுகாவலர்கள் மீது அடித்துவிட்டு மாலுக்குள் புகுந்தனர்.

விலை உயர்ந்த ஆடைகள், பெண்களின் கைப் பைகளை விற்கும் கடைகளாகக் குறிவைத்து, கண்ணாடி பேழைகளை அடித்து நொறுக்கி, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை திருடிக்கொண்டு போலீசார் வருவதற்குள் கார்களில் தப்பிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments