டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி..!

0 1639

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

ராஜ்காட்டிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பிரதமரை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், முப்படையினர் மற்றும் டெல்லி போலீஸின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

செங்கோட்டையில் பெண் ராணுவ அதிகாரி கொடிக்கயிற்றை வழங்க தேசிய கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

அப்போது, உள்நாட்டு தயாரிப்பான விமானப்படையின் துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் தேசிய கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.

பிரதமர் மோடி உரையாற்றி முடித்ததும் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

விழா மேடையிலிருந்து இறங்கிய பிரதமர், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments