நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது நாட்டின் 77 வது சுதந்திர தினம்..!

0 1655

டெல்லி செங்கோட்டையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு நோக்கினும் மூவர்ணக் கோலம்....

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி 10ஆவது ஆண்டாக சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தமது அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமது சமூக வலைதள பின்னணியையும் மூவர்ணக் கொடியின் நிறத்தில் மாற்றிய மோடி, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments