நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் தி.மு.க.வே காரணம் : அண்ணாமலை

0 12018

நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு தி.மு.க. அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நீட்டிற்கு இன்னொரு உயிர் போனால் அதற்கு தி.மு.க.வே காரணம் என்றார்.

முன்னதாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனை எடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அண்ணாமலை நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தமது 16-வது நாள் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் வரவேற்பளித்தனர். கட்சி தொண்டர்கள் சிலர் வேல் குத்தியும், சிறிய தேர் இழுத்தும் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments