நாங்குநேரி சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான மாணவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி - மருத்துவர்கள் பேட்டி

0 2128

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சென்றுள்ள சென்னை ஸ்டான்லி மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சிகிச்சை பெற்று வரும் நெல்லை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், அவரது இடது கையில் 3 இடங்களில் வெட்டு காயங்களும் வலது கையில் ஒரு இடத்தில் வெட்டு காயமும் உள்ளதாகத் தெரிவித்தனர்.

மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டு காயம் உள்ளதாகக் கூறிய மருத்துவர்கள், மாணவனுக்கு குறைந்தபட்சம் நான்கு வாரம் ஓய்வு தேவை என்றும் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments