ஜெயிலர் படம் பார்த்துவிட்டு மின்சார ரயிலில் படியில் தொங்கிச் சென்ற இளைஞர்-உயிரிழப்பு

0 1734

சென்னையில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர், மின்சார ரயிலில் இருந்து விழுந்து பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியார் செல்வம் என்ற அந்த இளைஞர் டிப்ளமோ படித்துவிட்டு சென்னை வாலாஜாபாத் ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று நண்பர்களுடன் வடபழனி வந்து ஜெயிலர் படம் பார்த்துவிட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் ஏறிய போது, கூட்டம் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் படியில் தொங்கிக் கொண்டே சென்ற பெரியார் செல்வம், ரயில் குரோம்பேட்டை தாண்டி சிறிது தூரம் சென்ற நிலையில், கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்தவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

பெரியார் செல்வம்தான் அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி என்று கூறப்படும் நிலையில், அவரது பெற்றோர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments