பெட்ரோல் போட பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

0 1479

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய இளைஞர்களுள் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

நேற்றிரவு வேடல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் தாங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாக கூறி, பெட்ரோல் போடச் சொன்னதாக கூறப்படுகிறது.

பணம் வந்த பிறகே பெட்ரோல் போட முடியும் என ஊழியர் வெங்கட் கூறியதால் ஆத்திரமடைந்து அவரை தாக்கிய இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் கோபி என்பவனை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஸ்ரீராம், ஜீவா ஆகிய இருவர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments