விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

0 1714

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் விளைநிலத்துக்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது.

25 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தபிறகே, அது மின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த கெண்டன்,மோகன்குமார் ஆகிய இரண்டு விவசாயிகளை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து பேட்டரி, கம்பிகள், ஒயர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments