நீட் தேர்வில் மகனைப் பறிகொடுத்த துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை

0 2314

சென்னை குரோம்பேட்டையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று காலை மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் சிபிஎஸ்இ பிரிவில் பிளஸ் டூ முடித்திருந்தார்.

மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு எழுதியிருந்தார்.

ஆனால் இருமுறையும் தோல்வியடைந்த நிலையில் ஜெகதீஸ்வரன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கை முடித்துவிட்டு வந்த தந்தை செல்வம், மகன் இறந்த துக்கம் தாளாமல் இன்று காலை அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு காரணமாக மகனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments