”1989 ஆம் ஆண்டில் அவங்க இந்தியாவிலேயே இல்லை” - நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில்

0 3665

1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே இல்லாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல பேசி இருக்கிறார் என்று தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் பிரச்னையை திசை திருப்பும் செயலில்தான் மத்திய அரசு ஈடுபட்டதாக தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஆண்டில் நிர்மலா சீதாராமன் லண்டனில் இருந்ததாக திருச்சி சிவா குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments