சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு...ராஜ்காட், செங்கோட்டை மற்றும் ஐடிஓ பகுதிகளில் 144 தடை உத்தரவு

0 1120

நாளை மறுநாள் சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்காட், செங்கோட்டை மற்றும் ஐடிஓ பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டையில் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய கீதம் ஒலிக்க பேண்டு வாத்தியங்களை இசைத்தபடி முப்படை வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.

ஒத்திகை பகுதியில், இந்திய விமானப்படையின் ALH துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments