பவானிசாகரில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீர் 15-ம் தேதி திறப்பு...

0 834

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் முதல்போக நன்செய் பாசனத்திற்காக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கீழ்பவானி பாசன கால்வாயில் நடைபெற்றுவரும் கான்கிரீட் தடுப்புச் சுவர் பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீர் மூலம், 3 மாவட்டங்களில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments