சென்னையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்து 11 சவரன் நகை திருட்டு ... திருடியவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு...

0 826

சென்னையில் வீட்டில் திருடிக் கொண்டிருந்தவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

குரோம்பேட்டை சாஸ்திரி காலனியைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.

மதிய நேரத்தில் அவரது மனைவி மற்றும் கல்லூரியில் படிக்கும் மகளும் திரும்பி வந்தபோது வீட்டிற்குள் இருவர் நிற்பதைக் கண்டனர்.

உடனடியாக, அவர்கள் கத்திக் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து மடக்கிப் பிடிக்க முயன்றனர். இருவரில் ஒருவன் தப்பியோடவே, மற்றொருவனை பிடித்து குரோம்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மடுவாங்கரையைச் சேர்ந்த தனமூர்த்தி என்பதும் 11 சவரன் நகையை அவர்கள் திருடியதும் தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments