மாணவர்களிடையே சாதி வேறுபாடு தொடர்வது சகிக்கமுடியாதது - முதலமைச்சர்

0 1366

மாணவர்களிடையே சாதீய வேறுபாடு தொடர்வது சகிக்க முடியாததாக இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும், மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments