நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு

0 1960

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு கடந்த ஆண்டில் பிரதமர் மோடி ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.அதன்படி இந்த ஆண்டில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்படி டிவிட்டரில் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்க விட்டு அதன்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பைக் பேரணியில் பங்கேற்க, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments