மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராகுல் காந்தி

0 1224

மணிப்பூருக்கு ராணுவத்தை அனுப்பி அங்கு அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ராணுவத்தால் மணிப்பூரில் இரண்டே நாட்களில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்து வரும் சம்பவங்களைப் போல இதற்கு முன் தாம் பார்த்ததில்லை என்று மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தம்மிடம் கூறியதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments