தமிழக அரசின் கடன் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரி தான் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

0 13423

தமிழ்நாடு அரசின் கடன் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தகவல் சரியானது தான் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

4 மாதமாக அமைச்சர் பி.டி.ஆர். பேசாமல் இருக்கிறார் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவது சரியல்ல., எந்த துறையில் இருக்கிறேனோ, அது குறித்து பேசுவது தான் விதிமுறை, நாகரீகம் என பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments