கும்பகோணத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட டி.எஸ்.பி. துவக்கி வைத்தார்..

0 1181

தமிழகத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி பல்வேறு இடங்களில் இன்று விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கும்பகோணம் காவல்துறை சார்பில் டிஎஸ்பி கீர்த்திவாசன் தொடங்கி வைத்த மினி மாரத்தான் போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்பி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு டவுன்ஹாலில் தொடங்கி தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வரை ஓடினர்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை புதிய ரயில் நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments