திருடப்பட்ட சரக்கு வாகனத்தில் ஆடு, மாடுகளை திருடி விற்பனை...இறைச்சிக் கடைகளுக்கு ஆடுகளை விற்று வந்த 2 பேர் கைது..

0 2644

சென்னையில் திருடப்பட்ட சரக்கு வாகனம் மூலமாக ஆடு, மாடுகளை திருடி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொண்டித்தோப்பைச் சேர்ந்த பகீரத் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருடு போனது குறித்த புகாரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஏழுகிணறு போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, காரில் வந்திறங்கிய ஒருவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்ததால் அந்த வாகனத்தின் இயக்கத்தை சுமார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரையில் கண்காணித்து மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் கோகுலை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஸ்டாலினும், கோகுலும் சரக்கு வாகனத்தை திருடி, அந்த வாகனத்தில் ஆடு, மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

நீலாங்கரையில் பதுங்கி இருந்தவர்களை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கார் சேஸிங் செய்து மடக்கி பிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments