தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கக் கோரி மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

0 863

திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தரக் கோரி அமலிநகர் கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடல் சீற்றம் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு, கரையில் படகுகளை நிறுத்த சிரமம் ஏற்படுவதாலும், படகுகள் அடிக்கடி கவிழ்ந்து மீனவர்கள் காயமடைவதாலும் தூண்டில் வளைவு பாலம் அமைக்கக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டே 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என மீன்வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments