சென்னையில் ஆயுதப்படைப்பிரிவில் ஒன்றாக பணியாற்றிய காவலர்களுக்கிடையே காதல்...3 ஆண்டுகளாக காதலித்து ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் தலைமறைவான காவலர்

0 25313

திருவாரூர் அருகே பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவானதாக ஆயுதப்படை காவலர் வீட்டின் முன்பு நள்ளிரவில் தர்ணா போராட்டம் நடத்திய பெண் காவலரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்த நிலையில், திருமணத்தை தவிர்த்து திருவாரூர் வந்த அஜித்திற்கு திருமணம் செய்ய வேறு பெண்ணை பேசி முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சென்னையில் மதுமிதா புகார் அளித்ததால், கடந்த மார்ச் 10 அன்று மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு, பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த இரண்டே நாளில் நண்பர் வீட்டிற்கு போவதாக கூறிச் சென்ற அஜித் திரும்ப வராதாதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மதுமிதா திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments