அமெரிக்காவில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதல்.. 3 பேர் உயிரிழப்பு

0 1280

அமெரிக்காவில் நெருப்பை அணைக்கப் பயன்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைடு கவுண்ட்டியில், பற்றிய நெருப்பை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் இரு ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், மற்றொன்று மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பணியிலிருந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments