மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை ராகுல் தொடங்கி வைப்பார் எனத் தகவல்..!

0 1453

நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று விவாம் நடைபெறுகிறது.

விவாதத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசுவார் என்று கூறப்படுகிறது.

விவாதத்திற்கு 12 மணி நேரம் அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 6 மணி நேரமும் காங்கிரசுக்கு ஒன்றேகால் மணி நேரமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விவாதத்தைத் தொடங்கி வைத்து ராகுல் காந்தி பேசுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விவாதத்திற்குப் பின்னர் பிரதமர் மோடி 10ம் தேதி பதில் அளிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments