உண்டியலில் காசு போடாததால் ஏமாற்றமடைந்ததாக திருடன் விரக்தி.. மக்கள் சரியில்லையென போலீஸாரிடம் புலம்பல்.. !!

0 1645

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி போலீசில் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார்.

கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருடியது தொடர்பாக சஜீவன் என்ற இளைஞரை பிடித்த போலீஸார் விசாரணைக்காக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, இப்பகுதி மக்கள் எவரும் சரியில்லை, உண்டியலில் யாரும் காசு போடவில்லை என சஜீவன் புலம்பியதைக் கேட்டு சுற்றி நின்றிருந்த மக்கள் சிரித்தனர்.

இக்கோயிலில் கடந்த 2 முறை உண்டியலை உடைத்து சஜீவன் திருடியிருந்ததால், தினமும் நடை சாத்தும் போது உண்டியலை திறந்து காணிக்கையை கோயில் நிர்வாகத்தினரே எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி உள்ளனர். இதுதெரியாமல் திருட வந்தவன் ஏமாற்றத்திற்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments