கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவுதினம்... நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

0 1692

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னையில் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் அவரது படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முரசொலி நாளிதழின் செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments