வேடசந்தூர் அருகே நடந்து சென்றவர் மீது பைக்கில் மோதிய போதை ஆசாமி

0 1314

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேலை தேடிச் சென்றவர் மீது குடிபோதை ஆசாமி பைக்கில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மலையரசன் என்பவர் வறுமை காரணமாக வேடசந்தூரில் வேலை தேடி அலைந்து வந்தார். நேற்று மலையரசன் தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் போதையில் வந்ததாகக் கூறப்படும் நபர் மோதியதில் மலையரசனுக்கு கால் மற்றும் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைக் கண்டு மனைவியும், குழந்தைகளும் அழுதது மனதைப் பிசைந்தது.

சாப்பாட்டுக்குக் கூட பணமில்லாத நிலையில் இருந்த மலையரசன் குடும்பத்தினரைக் கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments